Home » » போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிரதமர் , செயலாளர் ராஜனாமா

ஒரு­கொ­ட­வத்தை சுங்க பரி­சோ­தனை மத்­திய நிலை­யத்தில் வைத்து சில மாதங்­க­ளுக்கு முன்னர் 
சுங்க பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்ட பெருந்­தொகை போதைப் பொரு­ளுடன் கூடிய கொள்­க­லனை வரிச் சலுகை அளித்து விடு­தலை செய்­யு­மாறு கோரி கடிதம் அனுப்­பி­ய­தாக கூறப்­படும் பிர­தமர் தி.மு.ஜய­ரத்­னவின் இணைப்புச் செய­லா­ள­ரான கீர்த்தி சிறி வீர­சிங்க இணைப்புச் செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து ராஜி­னாமா செய்­துள்ளார்.

தனது ராஜி­னாமா கடி­தத்தை பிர­தமர் தி.மு.ஜய­ரத்­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ளார். டிசம்பர் மாதம் 9 ஆம் திக­தி­யிட்டு அவர் அனுப்பி வைத்­துள்ள குறித்த ராஜி­னாமா கடி­தத்தில் புத்த சாசன மற்றும் மத­வி­வ­கார அமைச்­சரின் இணைப்புச் செய­லாளர் என்ற பத­வி­யி­லி­ருந்து தான் ராஜி­னாமா செய்­வ­தா­கவும் அதனை ஏற்­றுக்­கொள்­ளு­மாறும் குறிப்­பிட்­டுள்ளார்.

எவ்­வா­றா­யினும் தனக்கும் குறித்த ஹெரோயின் கொள்­க­ல­னுக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை என அந்த ராஜி­னாமா கடி­தத்தில் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
 
இத­னி­டையே குறித்த இணைப்புச் செய­லாளர் புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கார அமைச்­சுக்கு உரித்­தான அனைத்து பத­வி­க­ளி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக புத்தசாசன அமைச்சும் அறிவித்துள்ளது. இதனை உள்ளூரின் பிரதான செய்திச் சேவை ஒன்று தெரிவித்தது.

0 comments to "போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிரதமர் , செயலாளர் ராஜனாமா"

Leave a comment

Powered by Blogger.