ஜெர்மனியினில் வசித்து வரும் புலம்பெயர் சொந்தங்களான சிவகுமார் - பேரின்பவதனி தம்பதியினர் தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர்.
கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே தமது வாழ்வை தொடரும் இம்முன்னாள் போராளிக்கு கைகொடுக்கும் வகையினில் அவர்கள் தமது அன்பளிப்பினை ஹெல்பிங் ஹேட்ஸ் அமைப்பினூடாக வழங்கியிருந்தனர்.
அவ்வுதவியினை பொறுப்பேற்று கைகளினில் சேர்ப்பித்திருந்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவரான ச.சஜீவன்.தமது பிறந்த நாளிற்கென நட்சத்திர விடுதிகளினில் தண்ணீராக அள்ளிக்கொட்டும் தாயக மற்றும் புலம்பெயர் சொந்தங்களிற்கு இதுவோர் நல்ல உதாரணம்.
நன்றி பதிவு
கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே தமது வாழ்வை தொடரும் இம்முன்னாள் போராளிக்கு கைகொடுக்கும் வகையினில் அவர்கள் தமது அன்பளிப்பினை ஹெல்பிங் ஹேட்ஸ் அமைப்பினூடாக வழங்கியிருந்தனர்.
அவ்வுதவியினை பொறுப்பேற்று கைகளினில் சேர்ப்பித்திருந்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவரான ச.சஜீவன்.தமது பிறந்த நாளிற்கென நட்சத்திர விடுதிகளினில் தண்ணீராக அள்ளிக்கொட்டும் தாயக மற்றும் புலம்பெயர் சொந்தங்களிற்கு இதுவோர் நல்ல உதாரணம்.
நன்றி பதிவு
இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன.
இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இருந்து தப்பிப்பதற்கு இலங்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை மாநாட்டுக்கு முன்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் போர் குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் தன்மையுடன் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை உள்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன.
இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இருந்து தப்பிப்பதற்கு இலங்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை மாநாட்டுக்கு முன்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் போர் குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் தன்மையுடன் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை உள்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
* மதுரை பகுதியில் தெனாவெட்டா திரியுற இளைஞனை ஜில்லா என்று செல்லமாக அழைப்பார்கள். அப்படியரு கேரக்டரில் விஜய் நடிப்பதால் படத்துக்கும் ஜில்லா என்று பெயர்.
* திருப்பாச்சி வெற்றிக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்சும், விஜய்யும் இணைந்துள்ள படம்.
* ஜில்லாவை டைரக்ட் செய்யும் எஸ்.டி.நேசன் சில வருடங்களுக்கு முன்பு அசோக், விசாகா நடித்த பிடிச்சிருக்கு படத்தை டைரக்ட் செய்திருந்தார். அந்த படம் சரியாக போகாததால் டைரக்டர் விஜய்யிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டார். வேலாயுதம் ஷூட்டிங்கின்போது விஜய்யிடம் நேசன் ஜில்லா கதையை சொல்ல அப்போதே ஓகே சொல்லிவிட்டார் விஜய்.
* தளபதி படத்தில் ரஜினி-மம்முட்டி கூட்டணி மாதிரி. இதில் விஜய்-மோகன்லால் கூட்டணி அமைந்திருக்கிறது. இரண்டு பேருக்குமே மாஸ் ஓப்பனிங், தனித்தனி காட்சிகள் என சம முக்கியத்துவம் இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் அனல் பறக்கும்.
* வழக்கமாக விஜய்யின் படங்களில் அவருக்குத்தான் ஓப்பனிங் சாங் இருக்கும் இதில் மோகன்லாலுடன் இணைந்து ஓப்பனிங் சாங் இருக்கிறது. இருவருமே ஆடியிருக்கிறார்கள். விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடியிருக்கிறார்கள்.
* மோகன்லால் விஜய்யின் தந்தையாக நடிக்கிறார் கேரக்டர் பெயர் சிவா. (காட்பாதராக நடிக்கிறார் என்ற தகவலும் உண்டு) விஜய் கேரக்டரின் பெயர் சக்தி. சிவசக்தி இணைந்து அரக்கனை அழிக்கிற மாதிரி தீயவர்களை அழிக்கிற கதை. விஜய் மார்டன் உடைகளில் வருவார். மோகன்லால் வெள்ளை வேட்டை சட்டை அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பார்.
* அரசியல் வசனங்களோ, காட்சிகளோ கிடையாது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை சுட்டிக்காட்டும் வகையிலான டைமிங் டயலாக் உண்டு.
* 6 பாடல்கள் அதில் ஒன்று விஜய்யின் ஓப்பனிங் சாங். ஒன்று திருவிழா சாங். ஒன்று குத்துசாங். குத்துசாங்கில் விஜய்யுடன் ஹாலிவுட் நடிகை செக்ரலட் வில்சன் ஆடியிருக்கிறார். ஆடிவிட்டு "விஜய் மாதிரி ஒரு டான்சரை பார்த்ததே இல்லை" என்று புகழ்ந்து விட்டு போய்விட்டார். ஒரு டூயட் பாடல் ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதியில் இதுவரை யாரும் படமே எடுத்திராத லொக்கேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பனிமலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.
* விஜய்யின் காமெடி ஏரியா பிரண்ட் சூரி. இருவரும் இணைந்து செய்திருக்கும் மதுரை ஏரியா லோக்கல் காமெடி தூள் கிளப்பும்.
* விஜய், இதில் சில கெட்-அப்கள் போடுகிறார். அதில் ஒரு கெட்அப் முஸ்லிம் இளைஞன்.
* விஜய் - காஜல் அகர்வால் ஜோடி துப்பாக்கி படத்துக்கு பிறகு மீண்டும் இணைகிறது.
* படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத் விமான நிலையம் அருகிலும், சென்னை பின்னி மில்லிலும் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்சில் படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்கள் அனைவருமே ஒன்றாக நடித்திருக்கிறார்கள். விஜய் மோகன்லால் இணைந்து கலக்கும் இந்த கிளைமாக்ஸ் பேசப்படுவதாக இருக்கும்.
* ஊருக்கு நல்லது செய்ற பெரிய மனுஷன் மோகன்லால். அவருக்கு எதிரிகள் நிறைய. அவருக்கு வரும் ஆபத்துகளை அவருக்கே தெரியாமல் விஜய் முறியடிப்பதுதான் கதை. ஒரு காரியத்தை மோகன்லால் திட்டமிடும்போதே விஜய் முடித்துவிட்டு வந்து நிப்பாராம். இதுதான் கதை பற்றி இப்போதைக்கு கசிந்திருக்கும் தகவல்.
* தமிழ் நாடு கேரளாவில் படத்தின் அத்தனை ஏரியாக்களும் விற்று விட்டது. சேனல் ரைட்ஸ் மட்டும் 18 கோடிக்கு விற்றிருப்பதாக சொல்கிறார்கள். உலகம் முழுவதும் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
வருகிற 15ந் தேதி ஆடியோ மற்றும் டிரைய்லர் ரிலீஸ். பொங்கலுக்கு படம் ரிலீஸ்.
* திருப்பாச்சி வெற்றிக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்சும், விஜய்யும் இணைந்துள்ள படம்.
* ஜில்லாவை டைரக்ட் செய்யும் எஸ்.டி.நேசன் சில வருடங்களுக்கு முன்பு அசோக், விசாகா நடித்த பிடிச்சிருக்கு படத்தை டைரக்ட் செய்திருந்தார். அந்த படம் சரியாக போகாததால் டைரக்டர் விஜய்யிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டார். வேலாயுதம் ஷூட்டிங்கின்போது விஜய்யிடம் நேசன் ஜில்லா கதையை சொல்ல அப்போதே ஓகே சொல்லிவிட்டார் விஜய்.
* தளபதி படத்தில் ரஜினி-மம்முட்டி கூட்டணி மாதிரி. இதில் விஜய்-மோகன்லால் கூட்டணி அமைந்திருக்கிறது. இரண்டு பேருக்குமே மாஸ் ஓப்பனிங், தனித்தனி காட்சிகள் என சம முக்கியத்துவம் இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் அனல் பறக்கும்.
* வழக்கமாக விஜய்யின் படங்களில் அவருக்குத்தான் ஓப்பனிங் சாங் இருக்கும் இதில் மோகன்லாலுடன் இணைந்து ஓப்பனிங் சாங் இருக்கிறது. இருவருமே ஆடியிருக்கிறார்கள். விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடியிருக்கிறார்கள்.
* மோகன்லால் விஜய்யின் தந்தையாக நடிக்கிறார் கேரக்டர் பெயர் சிவா. (காட்பாதராக நடிக்கிறார் என்ற தகவலும் உண்டு) விஜய் கேரக்டரின் பெயர் சக்தி. சிவசக்தி இணைந்து அரக்கனை அழிக்கிற மாதிரி தீயவர்களை அழிக்கிற கதை. விஜய் மார்டன் உடைகளில் வருவார். மோகன்லால் வெள்ளை வேட்டை சட்டை அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பார்.
* அரசியல் வசனங்களோ, காட்சிகளோ கிடையாது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை சுட்டிக்காட்டும் வகையிலான டைமிங் டயலாக் உண்டு.
* 6 பாடல்கள் அதில் ஒன்று விஜய்யின் ஓப்பனிங் சாங். ஒன்று திருவிழா சாங். ஒன்று குத்துசாங். குத்துசாங்கில் விஜய்யுடன் ஹாலிவுட் நடிகை செக்ரலட் வில்சன் ஆடியிருக்கிறார். ஆடிவிட்டு "விஜய் மாதிரி ஒரு டான்சரை பார்த்ததே இல்லை" என்று புகழ்ந்து விட்டு போய்விட்டார். ஒரு டூயட் பாடல் ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதியில் இதுவரை யாரும் படமே எடுத்திராத லொக்கேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பனிமலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.
* விஜய்யின் காமெடி ஏரியா பிரண்ட் சூரி. இருவரும் இணைந்து செய்திருக்கும் மதுரை ஏரியா லோக்கல் காமெடி தூள் கிளப்பும்.
* விஜய், இதில் சில கெட்-அப்கள் போடுகிறார். அதில் ஒரு கெட்அப் முஸ்லிம் இளைஞன்.
* விஜய் - காஜல் அகர்வால் ஜோடி துப்பாக்கி படத்துக்கு பிறகு மீண்டும் இணைகிறது.
* படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத் விமான நிலையம் அருகிலும், சென்னை பின்னி மில்லிலும் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்சில் படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்கள் அனைவருமே ஒன்றாக நடித்திருக்கிறார்கள். விஜய் மோகன்லால் இணைந்து கலக்கும் இந்த கிளைமாக்ஸ் பேசப்படுவதாக இருக்கும்.
* ஊருக்கு நல்லது செய்ற பெரிய மனுஷன் மோகன்லால். அவருக்கு எதிரிகள் நிறைய. அவருக்கு வரும் ஆபத்துகளை அவருக்கே தெரியாமல் விஜய் முறியடிப்பதுதான் கதை. ஒரு காரியத்தை மோகன்லால் திட்டமிடும்போதே விஜய் முடித்துவிட்டு வந்து நிப்பாராம். இதுதான் கதை பற்றி இப்போதைக்கு கசிந்திருக்கும் தகவல்.
* தமிழ் நாடு கேரளாவில் படத்தின் அத்தனை ஏரியாக்களும் விற்று விட்டது. சேனல் ரைட்ஸ் மட்டும் 18 கோடிக்கு விற்றிருப்பதாக சொல்கிறார்கள். உலகம் முழுவதும் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
வருகிற 15ந் தேதி ஆடியோ மற்றும் டிரைய்லர் ரிலீஸ். பொங்கலுக்கு படம் ரிலீஸ்.
சிலம்பாட்டம் சனாகான், சில்க் கதையில் உருவான நடிகையின் டைரி படத்தில் நடித்த பிறகு, இந்திக்கு சென்று விட்டார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது சல்மான்கானுடன் ஏற்பட்ட பழக்கத்தினால், தான் நடிக்கும் ஜெய்ஹோ படத்தில் சனாகானுக்கு நாயகி வாய்ப்பு கொடுத்தார் சல்மான்கான்.
அதனால், இந்தியில் கிடைத்த பெரிய வாய்ப்பினால் அடுத்தடுத்து தமிழில் இருந்து தேடிச்சென்ற சில படவாய்ப்புகளை திருப்பி அனுப்பினார் சனாகான். இப்போது அப்படம் திரைக்கு வரத்தயாராகி விட்டதால், படத்தின் வெற்றி தோல்வியைப்பொறுத்து இந்தி சினிமாவில் தனது எதிர்காலம் இருக்கும் என்று திக் திக் மனநிலையுடன் காத்திருக்கிறார் சனாகான்.
இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் ஆட சனாகானுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால், சல்மான்கான் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்ட நான் சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக வேண்டுமானால் நடிக்கலாம். குத்தாட்டம் ஆடினால் எனது கதாநாயகி இமேஜ் பாதிக்கப்படும் என்று தடாலடியாக மறுத்து விட்டாராம்.
சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் அஞ்சலியே ஒரு குத்தாட்டம் ஆடியதால், எந்த தயக்கமும் இல்லாமல் சனாகானிடமும் இதுபற்றி கேட்டவர்கள் அவரது இந்த முடிவினால் ஷாக் ஆகி விட்டார்களாம்.
அதனால், இந்தியில் கிடைத்த பெரிய வாய்ப்பினால் அடுத்தடுத்து தமிழில் இருந்து தேடிச்சென்ற சில படவாய்ப்புகளை திருப்பி அனுப்பினார் சனாகான். இப்போது அப்படம் திரைக்கு வரத்தயாராகி விட்டதால், படத்தின் வெற்றி தோல்வியைப்பொறுத்து இந்தி சினிமாவில் தனது எதிர்காலம் இருக்கும் என்று திக் திக் மனநிலையுடன் காத்திருக்கிறார் சனாகான்.
இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் ஆட சனாகானுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால், சல்மான்கான் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்ட நான் சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக வேண்டுமானால் நடிக்கலாம். குத்தாட்டம் ஆடினால் எனது கதாநாயகி இமேஜ் பாதிக்கப்படும் என்று தடாலடியாக மறுத்து விட்டாராம்.
சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் அஞ்சலியே ஒரு குத்தாட்டம் ஆடியதால், எந்த தயக்கமும் இல்லாமல் சனாகானிடமும் இதுபற்றி கேட்டவர்கள் அவரது இந்த முடிவினால் ஷாக் ஆகி விட்டார்களாம்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. அதில் இந்தி நடிகை தீபிகா படுகோனேதான் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால், படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற சில தினங்களிலேயே ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று மறுபிறவி எடுத்து வந்தார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடலுக்கு ஓய்வு தேவை. அதனால் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றெல்லாம் கண்டிசன் போட்டதால், அதையடுத்து மகள் செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக வேலைகள் நடந்த அப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி விட்டது.
இந்த நிலையில், வழக்கம்போல் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் புகையத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு ரஜினியின் புதிய படத்தை ஷங்கர் அல்லது கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்று சொன்னவர்கள். இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஏற்கனவே ரஜினியை வைத்து முத்து, படையப்பா என ஹிட் படங்களை கொடுத்தவர் என்பதோடு, இப்போது ரஜினியை அடிக்கடி சென்று சந்தித்து வரும் நபர் அவர் மட்டுமே. அதோடு தற்போது அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
மேலும், புதிய படம் பற்றி அவர்கள் முடிவெடுத்து விட்டபோதும், கோச்சடையான் வெளியாகயிருக்கும் இந்த நேரத்தில் புதிய படம் பற்றி செய்தி வெளியிட்டால், கோச்சடையானுக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதற்காகவே தற்போதைக்கு அமைதி காத்து வருவதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடலுக்கு ஓய்வு தேவை. அதனால் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றெல்லாம் கண்டிசன் போட்டதால், அதையடுத்து மகள் செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக வேலைகள் நடந்த அப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி விட்டது.
இந்த நிலையில், வழக்கம்போல் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் புகையத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு ரஜினியின் புதிய படத்தை ஷங்கர் அல்லது கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்று சொன்னவர்கள். இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஏற்கனவே ரஜினியை வைத்து முத்து, படையப்பா என ஹிட் படங்களை கொடுத்தவர் என்பதோடு, இப்போது ரஜினியை அடிக்கடி சென்று சந்தித்து வரும் நபர் அவர் மட்டுமே. அதோடு தற்போது அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
மேலும், புதிய படம் பற்றி அவர்கள் முடிவெடுத்து விட்டபோதும், கோச்சடையான் வெளியாகயிருக்கும் இந்த நேரத்தில் புதிய படம் பற்றி செய்தி வெளியிட்டால், கோச்சடையானுக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதற்காகவே தற்போதைக்கு அமைதி காத்து வருவதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.
மனித சமுதாயத்தையே அரித்தெடுக்கும் புற்றுநோயாக ஊழல் பெருகி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த ஒழிக்க, பலரும் பல வழிகளிலும் முயன்றும், இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
உலகம் முழுவதும் உள்ள 177 நாடுகளில் ஊழல் குறித்து ஆய்வு நடத்தியதில் ஊழல் இல்லாத நாடே இல்லை என தெரிய வந்துள்ளது.
மூன்றில் இருபங்கு நாடுகளின் நிலை மிக மோசமாக உள்ளது. இருப்பினும் ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.
ஊழல் மிகுதியாக உள்ள நாடுகளில் சோமாலியா, வட கொரியா, ஆப்கானிஸ்தான், சூடான், லிபியா, ஈராக், சிரியா, ஏமன் போன்ற நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய 91வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சீனா இலங்கை போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் குறைவாக உள்ளது.
பாகிஸ்தான், ரஷ்யா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் அதிகமாக உள்ளது. சட்ட விரோத பண பரிமாற்றத்தை ஒழித்து, அரசியலில் புழங்கும் நிதி முறைகேடுகளைத் தூய்மைப்படுத்தி, மக்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்டு, அரசுத் துறைகள் மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படச் செய்ய வேண்டியது மிக அவசியம்; அவசரமுமாகும்.
தொடர்ந்து குத்தாட்டம் ஆடத்தான் கூப்பிடறாங்க.. நல்ல ஹீரோயின் ரோல் மட்டும் கிடைக்கவே மாட்டேங்குதே என ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் நடிகை ப்ரியா மணி. பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பருத்தி வீரன் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி தமிழில் கடைசியாக நடித்தது ராவணன் என்ற தோல்விப் படத்தில்தான். அதிலும் அவர் ஹீரோயின் அல்ல.
சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த சாருலதா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். படம் வந்த சுவடே தெரியவில்லை. அவர் போடும் கண்டிஷன்கள், தன் பாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என இயக்குநர்களைப் படுத்துவது போன்ற காரணங்களால் அவரை தமிழ் சினிமா கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.
சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த சாருலதா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். படம் வந்த சுவடே தெரியவில்லை. அவர் போடும் கண்டிஷன்கள், தன் பாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என இயக்குநர்களைப் படுத்துவது போன்ற காரணங்களால் அவரை தமிழ் சினிமா கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.
தற்போது கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்று பிரியா மணியிடம் கேட்டபோது, "தமிழ் படங்களில் நல்ல கேரக்டர்கள் வரவில்லை. சாருலதா படத்துக்கு பிறகு என்னை திருப்திபடுத்தும் கேரக்டர்கள் எதுவும் அமையவில்லை. இதனால் நடிக்கவில்லை.
சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடியதை தெடர்ந்து நிறைய இந்திப் படங்களில், குத்தாட்டம் போடவே கூப்பிடுகிறார்கள். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் ஆடுவேன். ஆனால் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் படங்களில் ஆட வாய்ப்பு கிட்டினால் ஆடுவேன். அந்தப் படங்களின் கதை எப்படியிருந்தாலும் கவலையில்லை," என்றார்.
மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜக்சே, டட்லி ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சேவிற்கு மூத்தவர். சமல் ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு இளைய சகோதரராவார்.
பசில் ராஜபக்சேவிற்கு சிகிச்சைப் பெற்று பூரணமாக குணமடையும் தருவாயிலேயே புற்றுநோய் நிலை காணப்படுவதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள ஹஸ்டன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ராஜபக்சே சகோதரரான அமெரிக்காவில் வசித்துவரும் டட்லி ராஜபக்சே கவனித்து வருகிறார்.
இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜக்சே, டட்லி ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சேவிற்கு மூத்தவர். சமல் ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு இளைய சகோதரராவார்.
பசில் ராஜபக்சேவிற்கு சிகிச்சைப் பெற்று பூரணமாக குணமடையும் தருவாயிலேயே புற்றுநோய் நிலை காணப்படுவதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள ஹஸ்டன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ராஜபக்சே சகோதரரான அமெரிக்காவில் வசித்துவரும் டட்லி ராஜபக்சே கவனித்து வருகிறார்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை ஜோண்பிள்ளை அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற இராசையா, விக்டோரியா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும், ஜீன்(பிரித்தானியா), ஜெசி(இத்தாலி), ஜெனற்(கொழும்பு), ஜெயகுமார்(கனடா), றாஜ்குமார்(கனடா), சசிகலா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எலிசபேத்(பொன்மணி), ஜோசப்பின்(செல்லக்கிளி), ஜோர்ச், காலஞ்சென்ற ஜோசப்(பொன்னு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமிர்தநாதர்(மனோ- பிரித்தானியா), வசந்தன்(இத்தாலி), செல்வகுமார்(பரீஸ்), உமாகாந்தி(கனடா), றஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யூடியா, அனிக்கா, சோனியா, செல்டன், றுக்சி, ஜொனிக், மணிக், கிவ்டி, கிறேட்டி, றவீன், றுபேசன், றேனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-12-2013 சனிக்கிழமை மற்றும் 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 16-12-2013 திங்கட்கிழமை அன்று இளவாலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 03:30 மணியளவில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றாஜ்குமார் — கனடா
தொலைபேசி:
+14166301554
ஜெயகுமார் — கனடா
தொலைபேசி:
+4165141339
ஜீன் — பிரித்தானியா
தொலைபேசி:
+442082268254
ஜெசி — இத்தாலி
தொலைபேசி:
+39185231291
ஜெனற் — இலங்கை
தொலைபேசி:
+94112635509
சசிகலா — இலங்கை
தொலைபேசி:
+94773867099
பொன்மணி — கனடா
செல்லிடப்பேசி::
+19058169561
செல்லக்கிளி — கனடா
செல்லிடப்பேசி::
+19058488649
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற இராசையா, விக்டோரியா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும், ஜீன்(பிரித்தானியா), ஜெசி(இத்தாலி), ஜெனற்(கொழும்பு), ஜெயகுமார்(கனடா), றாஜ்குமார்(கனடா), சசிகலா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எலிசபேத்(பொன்மணி), ஜோசப்பின்(செல்லக்கிளி), ஜோர்ச், காலஞ்சென்ற ஜோசப்(பொன்னு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமிர்தநாதர்(மனோ- பிரித்தானியா), வசந்தன்(இத்தாலி), செல்வகுமார்(பரீஸ்), உமாகாந்தி(கனடா), றஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யூடியா, அனிக்கா, சோனியா, செல்டன், றுக்சி, ஜொனிக், மணிக், கிவ்டி, கிறேட்டி, றவீன், றுபேசன், றேனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-12-2013 சனிக்கிழமை மற்றும் 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 16-12-2013 திங்கட்கிழமை அன்று இளவாலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 03:30 மணியளவில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றாஜ்குமார் — கனடா
தொலைபேசி:
+14166301554
ஜெயகுமார் — கனடா
தொலைபேசி:
+4165141339
ஜீன் — பிரித்தானியா
தொலைபேசி:
+442082268254
ஜெசி — இத்தாலி
தொலைபேசி:
+39185231291
ஜெனற் — இலங்கை
தொலைபேசி:
+94112635509
சசிகலா — இலங்கை
தொலைபேசி:
+94773867099
பொன்மணி — கனடா
செல்லிடப்பேசி::
+19058169561
செல்லக்கிளி — கனடா
செல்லிடப்பேசி::
+19058488649
முல்லைத்தீவு அளம்பிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மிக்கேல்பிள்ளை ஞானமுத்து அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற அருனாசலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிசிலியா சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெபநேசன், சியாமளா, மஞ்சுளா(கனடா), சர்மிளா(கட்டார்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானரெத்தினம், ஞானாம்பிகை, ஞானேஸ்வரன், மற்றும் ஞானசவுந்தரம்மா, ஞானேந்திரன், ஞானாதிக்கர், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி, ரகு அலெக்ஸ்(கனடா), யூட்(கட்டார்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேனகா, ஜிந்துயன், மதுராங்கி, ஆஸ்ரன், அனிரா, அனன்டா, டிலுக்ஷியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் அளம்பில் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜெனற் ஜெறோமி(மருமகன்- கனடா)
தொடர்புகளுக்கு
ஜெபநேசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94773640388
சியாமளா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94770879390
ஞானேந்திரன்(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94775233442
ஆஞ்சலா(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94776152737
அன்னார், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற அருனாசலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிசிலியா சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெபநேசன், சியாமளா, மஞ்சுளா(கனடா), சர்மிளா(கட்டார்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானரெத்தினம், ஞானாம்பிகை, ஞானேஸ்வரன், மற்றும் ஞானசவுந்தரம்மா, ஞானேந்திரன், ஞானாதிக்கர், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி, ரகு அலெக்ஸ்(கனடா), யூட்(கட்டார்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேனகா, ஜிந்துயன், மதுராங்கி, ஆஸ்ரன், அனிரா, அனன்டா, டிலுக்ஷியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் அளம்பில் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜெனற் ஜெறோமி(மருமகன்- கனடா)
தொடர்புகளுக்கு
ஜெபநேசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94773640388
சியாமளா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94770879390
ஞானேந்திரன்(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94775233442
ஆஞ்சலா(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி::
+94776152737
நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல 75/3 கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சங்கரப்பிள்ளை அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, யசோதா, தயாழினி, விஜிதா, குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோகரன், விஜயசுந்தரம், பாலகுமார், கிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நன்னிலா, பரனிகா, தன்சிகா, கேதுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 14-12-2013 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் வன்னேரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வன்னேரிக்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
வினோகரன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி::
+94777974507
யசோ — இலங்கை
செல்லிடப்பேசி::
+94770378595
வினோகரன் — கனடா
செல்லிடப்பேசி::
+16475884845
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, யசோதா, தயாழினி, விஜிதா, குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோகரன், விஜயசுந்தரம், பாலகுமார், கிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நன்னிலா, பரனிகா, தன்சிகா, கேதுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 14-12-2013 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் வன்னேரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வன்னேரிக்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
வினோகரன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி::
+94777974507
யசோ — இலங்கை
செல்லிடப்பேசி::
+94770378595
வினோகரன் — கனடா
செல்லிடப்பேசி::
+16475884845
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் புனிதவதி அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதர்(அராலி) தவமணி(நீர்வேலி) தம்பதிகளின் மூத்த மகளும்,
பஞ்சலிங்கம்(நல்லூர், ஓய்வு பெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலானந்தி(பாலா- லண்டன்), பிரபாகரன்(பிரபா- கனடா), காயத்திரி(காய்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உருத்திரராஜன்(உருத்திரன்- ஜெர்மனி), காலஞ்சென்ற புஸ்பராணி(ராணி), மீனகாந்தி(மீனா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதனரூபன்(லண்டன்), தர்மஜா(கனடா), றோஷான்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராசசிங்கம், முதலிதம்பி ஆகியோரின் அன்பு மருமகளும்,
குணமதி(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புப் பெறாமகளும்,
யசிந்தா(ஜெர்மனி), சர்வானந்தம்(கனடா), பாலேஸ்வரி(லண்டன்), பாலசெளந்தரி(பேபி- லண்டன்), கண்மணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, நவமணி, இராஜசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷர்மி, ஜனுயா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
தர்மேந்திரா(விஜய்), யாழினி, சேயோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிஷன், திவ்யன், மிதுஷன், அஷ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
டிரான், வர்ணவி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2013 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
தொலைபேசி:
செல்லிடப்பேசி::
+94713785442
+94776577666
பாலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:
+442088689822
காய்(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி::
+447853391542
உருத்திரராஜன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி::
+49304922937
பிரபாகரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி::
+14169094862
மீனகாந்தி(சகோதரி) — கனடா
தொலைபேசி:
+19054931381
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதர்(அராலி) தவமணி(நீர்வேலி) தம்பதிகளின் மூத்த மகளும்,
பஞ்சலிங்கம்(நல்லூர், ஓய்வு பெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலானந்தி(பாலா- லண்டன்), பிரபாகரன்(பிரபா- கனடா), காயத்திரி(காய்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உருத்திரராஜன்(உருத்திரன்- ஜெர்மனி), காலஞ்சென்ற புஸ்பராணி(ராணி), மீனகாந்தி(மீனா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதனரூபன்(லண்டன்), தர்மஜா(கனடா), றோஷான்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராசசிங்கம், முதலிதம்பி ஆகியோரின் அன்பு மருமகளும்,
குணமதி(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புப் பெறாமகளும்,
யசிந்தா(ஜெர்மனி), சர்வானந்தம்(கனடா), பாலேஸ்வரி(லண்டன்), பாலசெளந்தரி(பேபி- லண்டன்), கண்மணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, நவமணி, இராஜசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷர்மி, ஜனுயா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
தர்மேந்திரா(விஜய்), யாழினி, சேயோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிஷன், திவ்யன், மிதுஷன், அஷ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
டிரான், வர்ணவி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2013 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
தொலைபேசி:
செல்லிடப்பேசி::
+94713785442
+94776577666
பாலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:
+442088689822
காய்(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி::
+447853391542
உருத்திரராஜன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி::
+49304922937
பிரபாகரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி::
+14169094862
மீனகாந்தி(சகோதரி) — கனடா
தொலைபேசி:
+19054931381
இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களால் கைவிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த வாகனங்கள் பழைய இரும்புக்காக விற்கப்பட்டுள்ளன.
இதன் உரிமையாளர்கள் பலர் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தொடர்ந்து பராமரிக்க இடவசதிகள் போதாமையாலும் இந்த வாகன்களை இரும்புக்காக கொடுக்கப்படுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்
இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வாகனங்களும் அடங்கும்.
நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். இதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டுமென வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கரவெட்டி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சபைத் தலைவர் பொ.வியாகேசுவின் தலைமையில இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
எமது மக்கள் நலன்சார்ந்து பலவற்றை நாம் நாம் அரசிடம் கேட்கின்றோம். ஆனால் நாம் கேட்பவற்றை வழங்கக் கூடாது என்ற மன நிலையில் பெரும்பானமை சமூகம் இருகின்றது.
இந்த எண்ணம் மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் அரசை நம்பியிருக்கக் கூடாது. எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.
மத்திய அரசுக்கு அடுத்தபடியாக மாகாணசபையும் அதற்கு அடுத்த நிலையில் பிரதேச சபைகளும் உள்ளன. ஒவ்வொருவரும் அடுத்தவரது எல்லைக்குள் பிரவேசிக்காமல் இருந்தால் தான் சுமுகமான உறவினைக் கட்டியெழுப்பமுடியும்.
நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். அதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டும்.
அரசு தமது கருத்தைப் பலப்படுத்தி எம்மை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. அரசு எமக்கு நேசக்கரம் நீட்டுவது போல நீட்டி எம்மை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
அந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், கல்வி அமைச்சர் த.குருகுலராசா, மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, இ.ஆர்னோல்ட், க.பரஞ்சோதி, வே.சிவயோகன், எஸ்.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சர்வேஸ்வரன், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ஆனந்தராஜ் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் சிறுவர்களது இசையணி மற்றும் நாதஸ்வர மங்கல ஒலி வரவேற்புடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.
மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் வரலாறு, இந்நாட்டு மக்களுக்கு தரும் படிப்பினைகளின் பின்னணியில் இந்நாட்டு சிங்கள, தமிழ் மக்களின் மனசாட்சிகள் உரையாடும் நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் 16ம் திகதி திங்கட்கிழமை பௌர்ணமி விடுமுறை தினத்தன்று காலை 9.30 மணிக்கு, ஜ.ம.மு தலைவர் மனோ கணேசனின் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு ஏற்பாடு செய்துள்ள மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கான இந்த அஞ்சலி மற்றும் உரை நிகழ்வில், சிங்கள பௌத்த மக்களின் ராஜகுருவாக கருதப்படும் கோட்டே ரஜமகா விகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித தேரரும், வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், இந்நாட்டு இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான பி. பி. தேவராஜும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான சாந்தி சச்சிதானந்தமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
சிங்கள-தமிழ் மக்களின் அபிலாஷைகள் பரஸ்பரம் எடுத்து கூறப்படவேண்டும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் கொள்கையின் அடிப்படையில் ஏற்பாடாகியுள்ள, பயன்தரும் இந்நிகழ்வில் தவறாமல் கலந்துகொள்ளும்படி தலைநகர தமிழ் பேசும் மக்களுக்கு ஜ.ம.மு இன் கொழும்பு மாவட்ட செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜ.ம.மு இன் உப செயலாளர் சண். குகவரதன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, மகளிர் இணைய செயலாளர் நந்தினி விஜயரத்தினம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு ஏற்பாடு செய்துள்ள மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கான இந்த அஞ்சலி மற்றும் உரை நிகழ்வில், சிங்கள பௌத்த மக்களின் ராஜகுருவாக கருதப்படும் கோட்டே ரஜமகா விகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித தேரரும், வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், இந்நாட்டு இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான பி. பி. தேவராஜும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான சாந்தி சச்சிதானந்தமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
சிங்கள-தமிழ் மக்களின் அபிலாஷைகள் பரஸ்பரம் எடுத்து கூறப்படவேண்டும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் கொள்கையின் அடிப்படையில் ஏற்பாடாகியுள்ள, பயன்தரும் இந்நிகழ்வில் தவறாமல் கலந்துகொள்ளும்படி தலைநகர தமிழ் பேசும் மக்களுக்கு ஜ.ம.மு இன் கொழும்பு மாவட்ட செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜ.ம.மு இன் உப செயலாளர் சண். குகவரதன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, மகளிர் இணைய செயலாளர் நந்தினி விஜயரத்தினம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பூதவுடலை தனிப்பட்ட முறையில் நல்லடக்கம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் விரும்புவதால் அவரது நல்லடக்கத்தை பார்வையிடும் வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைப்பது சாத்தியமில்லை என அந்நாட்டு அரசாங்க பேச்சாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நெல்சன் மண்டேலாவின் சொந்தக் கிராமமான குனுவில் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ள அவரது மரணச் சடங்கில் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட குறைந்தது 5000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் குனு கிராமத்தில் மண்டேலாவின் பூதவுடலுக்கான ஆரம்பகட்ட பொது மக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதும் தொடர்ந்து நடைபெறும் சடங்குகள் அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின் பிரகாரம் தனிப்பட்ட முறையில் இடம்பெறும் என அரசாங்க பேச்சாளரான பும்லா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
நெல்சன் மண்டேலாவின் சொந்தக் கிராமமான குனுவில் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ள அவரது மரணச் சடங்கில் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட குறைந்தது 5000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் குனு கிராமத்தில் மண்டேலாவின் பூதவுடலுக்கான ஆரம்பகட்ட பொது மக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதும் தொடர்ந்து நடைபெறும் சடங்குகள் அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின் பிரகாரம் தனிப்பட்ட முறையில் இடம்பெறும் என அரசாங்க பேச்சாளரான பும்லா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் நெல்சன் மண்டேலாவை நல்லடக்கம் செய்வது குடும்ப விவகாரம் என குறி்ப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்த பும்லா அவர்கள் அவரது மரணச் சடங்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு விரும்பவில்லை. குறிப்பாக அவரது பூதவுடல் புதைகுழியில் வைக்கப்படுவதை மக்கள் காண்பதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறினார்.
பொது மக்கள் அஞ்சலிக்காக தலைநகர் பிரெடோரியாவில் கடந்த 3 தினங்களாக வைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் இன்று சனிக்கிழமை காலை இராணுவ விமானத்தில் அவரது சொந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு இடம் பெறும் 2 மணி நேர பொது மரணச்சடங்கிற்காக விசேட மண்டபமும் வளைவான கூரையைக் கொண்ட பாரிய கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்சன் மண்டேலாவின் மரணச் சடங்கு தொடர்பான செய்திகளை சேகரிக்க வியாழக்கிழமை மாலை 3000 ஊடகவியலாளர்கள் வரை கேப் மாகாணத்திலுள்ள குனு கிராமத்தை முற்றுகையிட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கேப் மாகாண விமான நிலையத்துக்கு இராணுவ விமானத்தில் கொண்டு வரப்படும் நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் இராணுவ மரியாதையொன்றையடுத்து பீரங்கி வாகனமொன்றில் வைக்கப்பட்டு பின்னர் பிரேதம் வாகனத்தின் மூலம் குனு கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அவரது தெம்பு சமூகத்தினர் பாரம் பரிய மரணச் சடங்குகளை நடத்தவுள்ளனர்.
அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தனது 13 வயது மகளை பந்தயம் வைத்துத் தோற்றுப்போனதால் அச்சிறுமியை திருமணம் செய்துகொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ள சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
அக்கிராமத்தில் வசிக்கும் சுகுமார் என்பவர் தனது அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகையில் இழந்தவற்றை மீளப் பெற வேண்டும் என எண்ணி 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் தன் மகளை பந்தயம் வைத்துள்ளார்.
அத்துடன் தன் மகளை வயது கூடிய அந்த வீட்டுக்காரருக்கு திருமணம் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
இந்நிலையில் அந்தச் சூதாட்டத்திலும் தோல்வியைத் தழுவவே மகளை திருமணம் செய்துகொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சூதாட்டத்தில் வெற்றிபெற்ற நபருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இது குறித்து தகவல் கசிந்ததும் திருமணத்தை இடைநிறுத்துமாறு மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ,பர்தாவோ அணிந்தால் ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஓசானிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் 2014 ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் ஆள் அடையாள அட்டையானது இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே மாதிரியாகவும் , நிற புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும் எனவும், எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
இவ் ஊடகவியலாளர் மகாநாட்டில் கபே மற்றும் சி.எஷ்.ஆர் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் ,தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவ தும் அவை தொடர்பாக எவரும் கைது செய்யப்படாமையும் இந்த நாட்டில் ஊடக சுதந்திரத்தைக் கொலை செய்யும் நடவடிக்கைகளாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற தகவல் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே சரவணபவன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
அவரது உரை வருமாறு:
இன ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்தி 27 வருடங்கள் கொடிய சிறைவாசம் அனுபவித்த போதிலும் கூட தனது இலட்சிய உறுதியில் தளராது நின்று கறுப்பின மக்களை விடுவித்த மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கு இனவாத அநீதி களுக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனது மனப்பூர்வ மான அஞ்சலியைச் செலுத்தி எனது உரையை இங்கு நான் ஆரம்பிக்கின்றேன்.
மாமனிதர் நெல்சன் மண்டேலா இன ஒடுக்குதல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய அதே வேளையில் கருத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பவற்றை அடைவதிலும் தன் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக நீதிமன்றத்தைக் கூட ஓர் ஊடகமாக்கி மக்களை எழுச்சிபெற வைக்கமுடியும் என்பதற்கு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட போது அவர் ஆற்றிய நீதிமன்ற உரை சாட்சியம் சொல்லி நிற்கின்றது. அவரது போராட்ட வலிமையையும் நியாயத்தையும் ஊடகங்கள் உலகெங்கும் கொண்டு சென்றன. அதன் காரணமாக அவரைப் பயங்கரவாதியாகப் பிரகடனம் செய்த நாடுகள் கூட அவரது கருத்துக்களை ஆதரிக்கவேண்டிய நிலை எழுந்தது.
முழு உலகத்துடனும் இணைந்து எமது நாடும் அந்த மாமனிதருக்கு இன்று அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் சட்ட பூர்வமாகவும், சட்ட பூர்வமற்ற வழிமுறைகள் மூலமும் ஊடக ஒடுக்குமுறை தலைவிரித் தாடும் எமது நாட்டில் நாம் அவருக்கு அஞ்சலி செய்யும் தகுதி உள்ளவர்கள் தானா என எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியவர்களாயுள்ளோம்.
இங்கு இந்தச் சபையில் பல உறுப் பினர்கள் பல விடயங்கள் பற்றியும் பேசினார்கள். தொழில் துறைகளில் இருப்பவர்கள், மருத்து வர்கள், ஆசிரியர்கள் போன்ற பல்வேறுதுறைகளில் உள்ளவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள், வசதியீனங்கள் யாவும் எடுத்துக் கூறப்பட்டன. அவைகள் தேவையானவை தான். அதைப்போலவே எமது சமூகத்தில் இருக்கும் இன்னொரு சமூகத்தினரைப் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அவர்கள் தான் இந்த நாட்டிலுள்ள ஊடகவிய லாளர்கள். இவர்கள் பலதரப்பட்ட ஊடகங்களில் பணிபுரிகின்றார்கள்.
ஏனைய தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் போலவே இவர்களும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணிபுரிகிறார்கள். ஏதோ செய்திகளை எடுத்துப் பிரசுரித்துவிட்டு அல்லது வெளிப் படுத்தி விட்டு அவர்கள் சொகுசாக வாழ்க்கை நடத்துவதாக எவரும் நினைப்பார்களானால் அது மிகவும் தவறான ஒரு விடயம்.
அன்றாட வாழ்வில் அவர்களும் மற்றவர்களைப் போலவே கஷ்டங்களை அனுபவிக் கின்றார்கள். அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. பிள்ளைகள் இருக்கின்றார்கள். குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன. வீட்டுப் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை என்று நிறையப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள்.
அவர்கள் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் போன்றவற்றுக்காக எத்தனையோ விதமான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். ஆபத்துக்களைச் சந்திக்கின்றார்கள். இரவு பகல் பார்க்காமல் உழைக்கின்றார்கள். சில பல வேளைகளில் சரியான நேரத்தில் சரியாகச் சாப்பிடாமல் ஒரு பணிஸ், ஒருவடையைச் சாப்பிட்டு தேநீர், கோப்பியை அருந்திவிட்டு கடமை புரிகின்றார்கள்.
சில வேளைகளில் அதிகாரிகளின் கோபம், படையினரின் தாக்குதல், சில வேளைகளில் தம் உயிரையும் பணயம் வைக்கிறார்கள் இந்த ஊடகவியலாளர்கள். இவைகளைக் கவனித்து அவர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று எவரும் சிந்திக்காமல் இருப்பது கவலையளிக்கிறது.
கடந்த வருடம் ஊடகவியலாளர்களுக்கு 12 லட்சம் ரூபாய் கடனாக தருவதாக ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. அது உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று. அதே போன்று ஊடகவியலாளர்களுக்கென்று அரசு திட்டமொன்றை அறிமுகப்படுத்து வது அவசியம் என்று நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
கடந்த காலங்களில் கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களுக்கென்று வீடு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்ற திட்டங்கள் கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமின்றி வெளியூர் ஊடகவியலாளர்களுக்கும் பயன்படும் படியாக நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்.
மடிக்கணினிகளும் புகைப்படக் கருவிகளும் அவசியம் தான். அதே போல் வீட்டு வசதி, வாகன வசதி, போன்ற விடயங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கு நிதி வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இன்னொரு விடயம், நாடு முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தமது பணிகளில் ஈடுபடும்போது தாக்குதலுக்கு உள்ளாவது, விபத்துகளில் சிக்குவது போன்றவற்றுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறான சம்பவங்களில் உயிர் இழக்க நேரிடுமானால் அவர்களுக்கு மிக இலகுவாக நிதி வசதிகள் கிடைக்கும் வகையில் காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டில் நடப்பவைகள் யாவும் நாளைய தினம் பத்திரிகைகளிலும் ஏனைய ஊட கங்களிலும் வெளிவந்து விடுகின்றன. அதற்காக உழைக்கும், இரவு பகல் பாராது பணியாற்றும் ஊடகவியலாளர் களை நாம் மறந்துவிடகூடாது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
எமது நாட்டில் துணிச்சலுடனும் நேர்மையுடனும் உண்மைகளை வெளியிட்ட, நியாயங்களுக்கெதிராகக் குரல் கொடுத்த எத்தனையோ ஊடகவியலாளர்கள் நட்ட நடுவீதியில் பலர் பார்க்கப் படுகொலை செய்யப்பட்டனர்.
பலர் காணாமற்போய் விட்டனர். பலரின் வீடுகள் தாக்கப்பட்டன. பலருக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப் பட்டன. பலர் சிறை செய்யப்பட்டனர். பலர் உயிர்ப் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இப்படியான நிலையில் ஊடகவியலாளர் கள் மீதான வன்முறைகள் தொடர்பாக எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
எம்.ரி.வி., லங்கா ஈ நியுஸ், உதயன் போன்ற ஊடக நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றுக்குப் பொருள் சேதங்களும் பணியாளர்களுக்கு உயிர்ச் சேதமும் விளைவிக்கப்பட்டன.
ஆனால் இன்று வரை இப்படியான வன்முறைகள் தொடர்பாக நீதி கிடைக்கவில்லை. இந்நிறுவனங்களுக்கு எவ்வித நட்டஈடுகளும் வழங்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களின் குரலை ஒடுக்க ஊடக ஒழுக்கக் கோவை யயான்றை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்படியான ஒரு சூழ்நிலையில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் நடத் தப்படும் சட்டவிரோத வன்முறைகளின் பின்னால் அதிகாரம் படைத்த அரசசார்பு சக்திகள் உண்டு என நாம் சந்தேகப்படுவதை எவராவது தவறு என்று சொல்லிவிட முடியுமா?
வடக்கில் பிரபல ஊடகவியலாளராக விளங்கிய நிமலராஜன் அவரது வீட்டில் வைத்து அவரது குடும்பத்தினர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் சட்டமா அதிபரின் சம்மதத்துடன் பிணையில் விடப்பட்டனர்.
இவ் வழக்கில் பிரதான எதிரியான ஈ.பி.டி.பி உறுப்பினர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இன்றுவரை அவர் கைது செய்யப்படவோ அல்லது அவரைக் கைது செய்ய இன்டர்போல் அமைப்பைக் கோரவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் இன்றுவரை நீதி கிட்ட வில்லை. இதில் அதிகாரம் படைத்தவர் களின் பின்னணி இல்லையனச் சொல்லி விடமுடியுமா?
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக் கிரமதுங்க சர்வதேச அளவில் மதிக்கப்பட்ட ஒரு பிரபல ஊடகவியலாளர். அவர் பட்டப் பகலில் நட்ட நடு வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலை தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
ஒருவர் தடுப்புக் காவலில் இருந்தபோதே நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார். மற்றவர் போதிய ஆதாரங்கள் இல்லை எனச் சட்டமா அதிபரால் தெரிவிக் கப்பட்டதை அடுத்து அவர் விசாரணையின்றியே விடுதலை செய்யப்பட்டார். இவற்றின் பின்னணியில் அதிகாரங்கள் இல்லை என்பதை நம்ப முடியுமா?
லங்கா ஈ.நியூஸ் ஊடகவியலாளரும் கேலிச் சித்திரகாரருமான பிரகீத் எக்னெலிகொட இருவருடங்களுக்கு முன்னர் காணாமற் போய்விட்டார். அது தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் வெளிநாடொன்றில் தலைமறைவாக இருப்பதாக இலங்கையின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இப்பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது உறுப்பினர் ஒருவர் நான் பிரகீத்தை பிரான்சில் சந்தித்தாக கூறியிருந்தார். எனவே, அப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. அங்கு சாட்சியமளிக்க குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு பிரகீத்தை நேரடியாகத் தெரியாது எனவும் தனக்கு வேறு ஒருவர் பிறிதொரு வரைக்காட்டி இவர்தான் பிரகீத் என அறிமுகம் செய்ததாகக் கூறினார்.
ஆனால், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட அந்த நபர் அப்படி எதுவும் இடம்பெறவில்லை என பிரான் சிலிருந்து அறிவித்து விட்டார். இப்படியான நிலையில் பிரகீத் உயிருடன் இருப்பதாக ஒரு போலியான தோற்றப்பாடு உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தெளிவாகப் புலனாகின்றது.
இம்முயற்சியில் இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி, குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் பங்கு உண்டு என நம்பாமல் இருந்துவிட முடியுமா?
அண்மையில் கொழும்பிலுள்ள சண்டே லீடர் பத்திரிகையின் துணை ஆசிரியை மந்தனா இஸ்மாயில் வீட்டிற்குள் நட்டநடுநிசியில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்குள்ளவர் களைத் துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு சில ஆவணங்களைத் தேடியுள்ளனர்.
அவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டபோதிலும் அவர்களின் பின்னணியில் நின்றவர்கள் யார் என்ற விடயம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மந்தனா இஸ்மாயில் உயிர்ப் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இவ்வாறே மெளபீம பெண் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டபின் குற்றச்சாட்டு எதுவுமின்றி விடுவிக்கப்பட்டதும் ஊடகவியலாளர் திசா நாயக்கவுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டதும், இலங்கை ஊடக வரலாற்றில் மறந்துவிடக்கூடிய விடயங்களல்ல.
இங்கு என்னால் தெரிவிக்கப்பட்டவை ஊடகவியலாளர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநீதிகளில் ஒரு சில மட்டுமே. இலங் கையில் வேறு பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்பதையும், பலவித துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதையும் உயிரச்சம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.
ஏற்கனவே நான் குறிப்பிட்டமை போன்ற சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும் அவை தொடர்பாக எவரும் கைது செய்யப்படாமையும் இந்த நாட்டில் ஊடக சுதந்திரத்தைக் கொலை செய்யும் நடவடிக்கைகளாகும்.
இவற்றின் பின்னால் அரசசார்பு அதிகார பீடங்கள் உள்ளன என்பதை இடம்பெறும் ஒவ்வொரு சம்பவங்களும், அவை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையும் துல்லியமாகத் தெளிவுபடுத்துகின்றன.
இன்று எமது நாட்டில் இடம்பெறும் ஊடக ஒடுக்குமுறைகள் தொடர்பான கேள்விகள் எமது நாட்டின் எல்லைகளுக்கு வெளியே விரிந்துவிட்டன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சர்வதேசம் எம்மைக் குற்றக் கூண்டில் ஏற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை இலங்கையில் நிலவும் ஊடக ஒடுக்குமுறை தொடர்பாக வெளியிட்ட கண்டனத்தை நாம் அலட்சியப்படுத்தி விடமுடியாது.
அது மட்டுமின்றி டேவிட் கமரூன் உதயன் நிறுவனத்துக்கு வருகை தந்தமையும் அங்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டமையும் புறமொதுக்கப்படக் கூடிய விடயங்களல்ல.
எமது அரசும் அரசின் அதிகார பீடங்களும் ஊடக சுதந்திரம் உட்பட ஜனநாயக விழுமியங்களைப் பேணி சர்வதேச நெருக்கடிகளுக்குள் சிக்கும் அபாயத்திலிருந்து மீளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நானும் ஓர் இலங்கையன் என்ற உரிமையுடன் கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன் என்றார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற தகவல் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே சரவணபவன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
அவரது உரை வருமாறு:
இன ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்தி 27 வருடங்கள் கொடிய சிறைவாசம் அனுபவித்த போதிலும் கூட தனது இலட்சிய உறுதியில் தளராது நின்று கறுப்பின மக்களை விடுவித்த மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கு இனவாத அநீதி களுக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனது மனப்பூர்வ மான அஞ்சலியைச் செலுத்தி எனது உரையை இங்கு நான் ஆரம்பிக்கின்றேன்.
மாமனிதர் நெல்சன் மண்டேலா இன ஒடுக்குதல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய அதே வேளையில் கருத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பவற்றை அடைவதிலும் தன் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக நீதிமன்றத்தைக் கூட ஓர் ஊடகமாக்கி மக்களை எழுச்சிபெற வைக்கமுடியும் என்பதற்கு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட போது அவர் ஆற்றிய நீதிமன்ற உரை சாட்சியம் சொல்லி நிற்கின்றது. அவரது போராட்ட வலிமையையும் நியாயத்தையும் ஊடகங்கள் உலகெங்கும் கொண்டு சென்றன. அதன் காரணமாக அவரைப் பயங்கரவாதியாகப் பிரகடனம் செய்த நாடுகள் கூட அவரது கருத்துக்களை ஆதரிக்கவேண்டிய நிலை எழுந்தது.
முழு உலகத்துடனும் இணைந்து எமது நாடும் அந்த மாமனிதருக்கு இன்று அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் சட்ட பூர்வமாகவும், சட்ட பூர்வமற்ற வழிமுறைகள் மூலமும் ஊடக ஒடுக்குமுறை தலைவிரித் தாடும் எமது நாட்டில் நாம் அவருக்கு அஞ்சலி செய்யும் தகுதி உள்ளவர்கள் தானா என எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியவர்களாயுள்ளோம்.
இங்கு இந்தச் சபையில் பல உறுப் பினர்கள் பல விடயங்கள் பற்றியும் பேசினார்கள். தொழில் துறைகளில் இருப்பவர்கள், மருத்து வர்கள், ஆசிரியர்கள் போன்ற பல்வேறுதுறைகளில் உள்ளவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள், வசதியீனங்கள் யாவும் எடுத்துக் கூறப்பட்டன. அவைகள் தேவையானவை தான். அதைப்போலவே எமது சமூகத்தில் இருக்கும் இன்னொரு சமூகத்தினரைப் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அவர்கள் தான் இந்த நாட்டிலுள்ள ஊடகவிய லாளர்கள். இவர்கள் பலதரப்பட்ட ஊடகங்களில் பணிபுரிகின்றார்கள்.
ஏனைய தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் போலவே இவர்களும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணிபுரிகிறார்கள். ஏதோ செய்திகளை எடுத்துப் பிரசுரித்துவிட்டு அல்லது வெளிப் படுத்தி விட்டு அவர்கள் சொகுசாக வாழ்க்கை நடத்துவதாக எவரும் நினைப்பார்களானால் அது மிகவும் தவறான ஒரு விடயம்.
அன்றாட வாழ்வில் அவர்களும் மற்றவர்களைப் போலவே கஷ்டங்களை அனுபவிக் கின்றார்கள். அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. பிள்ளைகள் இருக்கின்றார்கள். குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன. வீட்டுப் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை என்று நிறையப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள்.
அவர்கள் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் போன்றவற்றுக்காக எத்தனையோ விதமான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். ஆபத்துக்களைச் சந்திக்கின்றார்கள். இரவு பகல் பார்க்காமல் உழைக்கின்றார்கள். சில பல வேளைகளில் சரியான நேரத்தில் சரியாகச் சாப்பிடாமல் ஒரு பணிஸ், ஒருவடையைச் சாப்பிட்டு தேநீர், கோப்பியை அருந்திவிட்டு கடமை புரிகின்றார்கள்.
சில வேளைகளில் அதிகாரிகளின் கோபம், படையினரின் தாக்குதல், சில வேளைகளில் தம் உயிரையும் பணயம் வைக்கிறார்கள் இந்த ஊடகவியலாளர்கள். இவைகளைக் கவனித்து அவர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று எவரும் சிந்திக்காமல் இருப்பது கவலையளிக்கிறது.
கடந்த வருடம் ஊடகவியலாளர்களுக்கு 12 லட்சம் ரூபாய் கடனாக தருவதாக ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. அது உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று. அதே போன்று ஊடகவியலாளர்களுக்கென்று அரசு திட்டமொன்றை அறிமுகப்படுத்து வது அவசியம் என்று நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
கடந்த காலங்களில் கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களுக்கென்று வீடு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்ற திட்டங்கள் கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமின்றி வெளியூர் ஊடகவியலாளர்களுக்கும் பயன்படும் படியாக நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்.
மடிக்கணினிகளும் புகைப்படக் கருவிகளும் அவசியம் தான். அதே போல் வீட்டு வசதி, வாகன வசதி, போன்ற விடயங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கு நிதி வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இன்னொரு விடயம், நாடு முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தமது பணிகளில் ஈடுபடும்போது தாக்குதலுக்கு உள்ளாவது, விபத்துகளில் சிக்குவது போன்றவற்றுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறான சம்பவங்களில் உயிர் இழக்க நேரிடுமானால் அவர்களுக்கு மிக இலகுவாக நிதி வசதிகள் கிடைக்கும் வகையில் காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டில் நடப்பவைகள் யாவும் நாளைய தினம் பத்திரிகைகளிலும் ஏனைய ஊட கங்களிலும் வெளிவந்து விடுகின்றன. அதற்காக உழைக்கும், இரவு பகல் பாராது பணியாற்றும் ஊடகவியலாளர் களை நாம் மறந்துவிடகூடாது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
எமது நாட்டில் துணிச்சலுடனும் நேர்மையுடனும் உண்மைகளை வெளியிட்ட, நியாயங்களுக்கெதிராகக் குரல் கொடுத்த எத்தனையோ ஊடகவியலாளர்கள் நட்ட நடுவீதியில் பலர் பார்க்கப் படுகொலை செய்யப்பட்டனர்.
பலர் காணாமற்போய் விட்டனர். பலரின் வீடுகள் தாக்கப்பட்டன. பலருக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப் பட்டன. பலர் சிறை செய்யப்பட்டனர். பலர் உயிர்ப் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இப்படியான நிலையில் ஊடகவியலாளர் கள் மீதான வன்முறைகள் தொடர்பாக எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
எம்.ரி.வி., லங்கா ஈ நியுஸ், உதயன் போன்ற ஊடக நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றுக்குப் பொருள் சேதங்களும் பணியாளர்களுக்கு உயிர்ச் சேதமும் விளைவிக்கப்பட்டன.
ஆனால் இன்று வரை இப்படியான வன்முறைகள் தொடர்பாக நீதி கிடைக்கவில்லை. இந்நிறுவனங்களுக்கு எவ்வித நட்டஈடுகளும் வழங்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களின் குரலை ஒடுக்க ஊடக ஒழுக்கக் கோவை யயான்றை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்படியான ஒரு சூழ்நிலையில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் நடத் தப்படும் சட்டவிரோத வன்முறைகளின் பின்னால் அதிகாரம் படைத்த அரசசார்பு சக்திகள் உண்டு என நாம் சந்தேகப்படுவதை எவராவது தவறு என்று சொல்லிவிட முடியுமா?
வடக்கில் பிரபல ஊடகவியலாளராக விளங்கிய நிமலராஜன் அவரது வீட்டில் வைத்து அவரது குடும்பத்தினர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் சட்டமா அதிபரின் சம்மதத்துடன் பிணையில் விடப்பட்டனர்.
இவ் வழக்கில் பிரதான எதிரியான ஈ.பி.டி.பி உறுப்பினர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இன்றுவரை அவர் கைது செய்யப்படவோ அல்லது அவரைக் கைது செய்ய இன்டர்போல் அமைப்பைக் கோரவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் இன்றுவரை நீதி கிட்ட வில்லை. இதில் அதிகாரம் படைத்தவர் களின் பின்னணி இல்லையனச் சொல்லி விடமுடியுமா?
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக் கிரமதுங்க சர்வதேச அளவில் மதிக்கப்பட்ட ஒரு பிரபல ஊடகவியலாளர். அவர் பட்டப் பகலில் நட்ட நடு வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலை தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
ஒருவர் தடுப்புக் காவலில் இருந்தபோதே நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார். மற்றவர் போதிய ஆதாரங்கள் இல்லை எனச் சட்டமா அதிபரால் தெரிவிக் கப்பட்டதை அடுத்து அவர் விசாரணையின்றியே விடுதலை செய்யப்பட்டார். இவற்றின் பின்னணியில் அதிகாரங்கள் இல்லை என்பதை நம்ப முடியுமா?
லங்கா ஈ.நியூஸ் ஊடகவியலாளரும் கேலிச் சித்திரகாரருமான பிரகீத் எக்னெலிகொட இருவருடங்களுக்கு முன்னர் காணாமற் போய்விட்டார். அது தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் வெளிநாடொன்றில் தலைமறைவாக இருப்பதாக இலங்கையின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இப்பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது உறுப்பினர் ஒருவர் நான் பிரகீத்தை பிரான்சில் சந்தித்தாக கூறியிருந்தார். எனவே, அப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. அங்கு சாட்சியமளிக்க குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு பிரகீத்தை நேரடியாகத் தெரியாது எனவும் தனக்கு வேறு ஒருவர் பிறிதொரு வரைக்காட்டி இவர்தான் பிரகீத் என அறிமுகம் செய்ததாகக் கூறினார்.
ஆனால், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட அந்த நபர் அப்படி எதுவும் இடம்பெறவில்லை என பிரான் சிலிருந்து அறிவித்து விட்டார். இப்படியான நிலையில் பிரகீத் உயிருடன் இருப்பதாக ஒரு போலியான தோற்றப்பாடு உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தெளிவாகப் புலனாகின்றது.
இம்முயற்சியில் இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி, குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் பங்கு உண்டு என நம்பாமல் இருந்துவிட முடியுமா?
அண்மையில் கொழும்பிலுள்ள சண்டே லீடர் பத்திரிகையின் துணை ஆசிரியை மந்தனா இஸ்மாயில் வீட்டிற்குள் நட்டநடுநிசியில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்குள்ளவர் களைத் துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு சில ஆவணங்களைத் தேடியுள்ளனர்.
அவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டபோதிலும் அவர்களின் பின்னணியில் நின்றவர்கள் யார் என்ற விடயம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மந்தனா இஸ்மாயில் உயிர்ப் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இவ்வாறே மெளபீம பெண் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டபின் குற்றச்சாட்டு எதுவுமின்றி விடுவிக்கப்பட்டதும் ஊடகவியலாளர் திசா நாயக்கவுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டதும், இலங்கை ஊடக வரலாற்றில் மறந்துவிடக்கூடிய விடயங்களல்ல.
இங்கு என்னால் தெரிவிக்கப்பட்டவை ஊடகவியலாளர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநீதிகளில் ஒரு சில மட்டுமே. இலங் கையில் வேறு பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்பதையும், பலவித துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதையும் உயிரச்சம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.
ஏற்கனவே நான் குறிப்பிட்டமை போன்ற சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும் அவை தொடர்பாக எவரும் கைது செய்யப்படாமையும் இந்த நாட்டில் ஊடக சுதந்திரத்தைக் கொலை செய்யும் நடவடிக்கைகளாகும்.
இவற்றின் பின்னால் அரசசார்பு அதிகார பீடங்கள் உள்ளன என்பதை இடம்பெறும் ஒவ்வொரு சம்பவங்களும், அவை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையும் துல்லியமாகத் தெளிவுபடுத்துகின்றன.
இன்று எமது நாட்டில் இடம்பெறும் ஊடக ஒடுக்குமுறைகள் தொடர்பான கேள்விகள் எமது நாட்டின் எல்லைகளுக்கு வெளியே விரிந்துவிட்டன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சர்வதேசம் எம்மைக் குற்றக் கூண்டில் ஏற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை இலங்கையில் நிலவும் ஊடக ஒடுக்குமுறை தொடர்பாக வெளியிட்ட கண்டனத்தை நாம் அலட்சியப்படுத்தி விடமுடியாது.
அது மட்டுமின்றி டேவிட் கமரூன் உதயன் நிறுவனத்துக்கு வருகை தந்தமையும் அங்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டமையும் புறமொதுக்கப்படக் கூடிய விடயங்களல்ல.
எமது அரசும் அரசின் அதிகார பீடங்களும் ஊடக சுதந்திரம் உட்பட ஜனநாயக விழுமியங்களைப் பேணி சர்வதேச நெருக்கடிகளுக்குள் சிக்கும் அபாயத்திலிருந்து மீளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நானும் ஓர் இலங்கையன் என்ற உரிமையுடன் கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன் என்றார்.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமலும், கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டும் ஒரு கைப் பிடியை மட்டும் பிடித்துக் கொண்டும் செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி. ரத்னாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாடசாலை பேருந்துகளில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ் செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் முறையொன்றையும் புதிதாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வரவு - செலவு திட்டத்தில் போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் நேற்றுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கையின் போக்குவரத்துச் சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு பல்வேறு விசேட நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. பேருந்தில் பணியாற்றும் சாரதிகளும், நடத்துனர்களும் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும்.
இதற்கமைய ஜி.டி.எஸ். சீ.சீ.ரி.வி. கமரா ஆகியவற்றை பொருத்தி சாரதிகளினதும் நடத்துனர்களினதும் நடவடிக்கைகளை அவதானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும்.
விசேடமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துபவர்கள் குறித்தும் நாம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களில் அனேகமானோர் தலைக்கவசம் அணிவதில்லை. போக்குவரத்து பொலிஸாரைக் கண்டவுடன் மாத்திரமே அதனை அணிகின்றனர் என அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.
பாடசாலை பேருந்துகளில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ் செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் முறையொன்றையும் புதிதாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வரவு - செலவு திட்டத்தில் போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் நேற்றுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கையின் போக்குவரத்துச் சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு பல்வேறு விசேட நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. பேருந்தில் பணியாற்றும் சாரதிகளும், நடத்துனர்களும் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும்.
இதற்கமைய ஜி.டி.எஸ். சீ.சீ.ரி.வி. கமரா ஆகியவற்றை பொருத்தி சாரதிகளினதும் நடத்துனர்களினதும் நடவடிக்கைகளை அவதானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும்.
விசேடமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துபவர்கள் குறித்தும் நாம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களில் அனேகமானோர் தலைக்கவசம் அணிவதில்லை. போக்குவரத்து பொலிஸாரைக் கண்டவுடன் மாத்திரமே அதனை அணிகின்றனர் என அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு நிகழ்ச்சியாக நடிகை சுஹாசினி, கமல்ஹாசனை விழா மேடையில் பேட்டி கண்டார். அதில் சில முக்கியமான கேள்வி பதில்கள் வருமாறு:
சுஹாசினி: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களை ரீமேக் செய்தால் எந்தப் படத்தில் நடிப்பீர்கள்?
கமல்: கப்பலோட்டிய தமிழன் படத்தில் சுப்பிரமணியம் சிவா கேரக்டரில் நடிப்பேன். காரணம் அந்த வேடத்தில் எங்கள் சண்முகம் அண்ணாச்சி நடித்திருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் என்றால் ஜாக்சன் துரையாக நடிப்பேன். தசாவதாரம் படத்தில் ப்லெட்சராக நடித்த அனுபவம் இருக்கிறது.
சுஹாசினி: இந்திய நூற்றாண்டின் சினிமா பரிசாக நீங்களும் ரஜினியும் இணைந்து நடிப்பீர்களா?
கமல்: நாங்கள் இணைந்து நடித்தால் உங்களுக்கு பரிசுதான். எங்களுக்கு....?. இரண்டுபேரையும் வைத்து படம் எடுக்கிற அளவுக்கு வசதியான தயாரிப்பாளர்கள் கிடைப்பது சிரமம். வேண்டுமானால் பிரீயாக நடிக்கலாம். நான் ரெடி, ஆனா அவர்(ரஜினி) எப்படின்னு எனக்குத் தெரியாது.
சுஹாசினி: கிரிஷ்-2, தூம்-2, விஸ்வரூபம்-2 மாதிரி கமல்-2, சச்சின்-2 வருவார்களா?
கமல்: வந்திருக்கலாம். என் சுயநலம் காரணமாக அவர்கள் என் கண்களுக்கு தெரியாமல் இருக்காலம். நிச்சயம் வருவார்கள் எங்களை விட திறமையானவர்களால் சினிமா நிறையும்.
சுஹாசினி: தணிக்கை குழுவிற்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவதில்லையே...?
கமல்: தணிக்கை குழுவில் சினிமாவை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவை தெரிந்தவர்கள் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை திணிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுஹாசினி: உங்களை இயக்குனராக தூண்டிய சக்தி எது?
கமல்: உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. என் அம்மாகூட நான் இயக்குனராவேன்னு நம்பியதில்லை. அதை நம்பியவர் ஆர்.சி.சக்தி. அவர்தான் என்னை தூண்டிய சக்தி.
சுஹாசினி: உலக சினிமா தரத்துக்கு நாம் ஏன் இன்னும் உயரவில்லை?
கமல்: இதற்கு நான் மட்டும் அல்ல எல்லோரும் சேர்ந்து பாடுபட வேண்டும். பாலுமகேந்திரா போன்றவர்கள் அந்த காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு நாமும் இணைய வேண்டும். சினிமாவுக்கு வருகிறவர்கள் நிறைய உலக படங்களை பார்க்க வேண்டும். அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். காப்பி அடிக்க கூடாது.
சுஹாசினி: சினிமாவுக்கும், இலக்கியத்துக்குமான இடைவெளி பெரிதாக இருக்கிறதே?
கமல்: இரண்டுக்கும் இடையில் பாலம் அமைக்க 40 வருடத்துக்கு முன்பே முயற்சி செய்தேன். கேரளாவிலும், வங்கத்திலும் அது சாத்தியமாகியிருக்கிறது. இங்கும் சாத்தியப்பட வேண்டும். நிறைய இலக்கிய வாதிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அது இன்னும் அதிகமாக வேண்டும்.
சுஹாசினி: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களை ரீமேக் செய்தால் எந்தப் படத்தில் நடிப்பீர்கள்?
கமல்: கப்பலோட்டிய தமிழன் படத்தில் சுப்பிரமணியம் சிவா கேரக்டரில் நடிப்பேன். காரணம் அந்த வேடத்தில் எங்கள் சண்முகம் அண்ணாச்சி நடித்திருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் என்றால் ஜாக்சன் துரையாக நடிப்பேன். தசாவதாரம் படத்தில் ப்லெட்சராக நடித்த அனுபவம் இருக்கிறது.
சுஹாசினி: இந்திய நூற்றாண்டின் சினிமா பரிசாக நீங்களும் ரஜினியும் இணைந்து நடிப்பீர்களா?
கமல்: நாங்கள் இணைந்து நடித்தால் உங்களுக்கு பரிசுதான். எங்களுக்கு....?. இரண்டுபேரையும் வைத்து படம் எடுக்கிற அளவுக்கு வசதியான தயாரிப்பாளர்கள் கிடைப்பது சிரமம். வேண்டுமானால் பிரீயாக நடிக்கலாம். நான் ரெடி, ஆனா அவர்(ரஜினி) எப்படின்னு எனக்குத் தெரியாது.
சுஹாசினி: கிரிஷ்-2, தூம்-2, விஸ்வரூபம்-2 மாதிரி கமல்-2, சச்சின்-2 வருவார்களா?
கமல்: வந்திருக்கலாம். என் சுயநலம் காரணமாக அவர்கள் என் கண்களுக்கு தெரியாமல் இருக்காலம். நிச்சயம் வருவார்கள் எங்களை விட திறமையானவர்களால் சினிமா நிறையும்.
சுஹாசினி: தணிக்கை குழுவிற்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவதில்லையே...?
கமல்: தணிக்கை குழுவில் சினிமாவை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவை தெரிந்தவர்கள் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை திணிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுஹாசினி: உங்களை இயக்குனராக தூண்டிய சக்தி எது?
கமல்: உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. என் அம்மாகூட நான் இயக்குனராவேன்னு நம்பியதில்லை. அதை நம்பியவர் ஆர்.சி.சக்தி. அவர்தான் என்னை தூண்டிய சக்தி.
சுஹாசினி: உலக சினிமா தரத்துக்கு நாம் ஏன் இன்னும் உயரவில்லை?
கமல்: இதற்கு நான் மட்டும் அல்ல எல்லோரும் சேர்ந்து பாடுபட வேண்டும். பாலுமகேந்திரா போன்றவர்கள் அந்த காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு நாமும் இணைய வேண்டும். சினிமாவுக்கு வருகிறவர்கள் நிறைய உலக படங்களை பார்க்க வேண்டும். அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். காப்பி அடிக்க கூடாது.
சுஹாசினி: சினிமாவுக்கும், இலக்கியத்துக்குமான இடைவெளி பெரிதாக இருக்கிறதே?
கமல்: இரண்டுக்கும் இடையில் பாலம் அமைக்க 40 வருடத்துக்கு முன்பே முயற்சி செய்தேன். கேரளாவிலும், வங்கத்திலும் அது சாத்தியமாகியிருக்கிறது. இங்கும் சாத்தியப்பட வேண்டும். நிறைய இலக்கிய வாதிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அது இன்னும் அதிகமாக வேண்டும்.
ஜில்லாவைத் தொடர்ந்து விஜய் நேரடி மலையாளப் படம் ஒன்றில் மோகன்லாலுடன் நடிக்கிறார். அதனை மோகன்லால் தயாரிக்கிறார் என்றும், மம்முட்டியுன் ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் என்றும் செய்திகள் வெளியானது. இதனை விஜ் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: கேரள சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும். என் மனசுக்கு நெருக்கமான நண்பர்கள் அங்கு இருக்கிறார்கள். எனக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள். நேரடி மலையாள படம் எதிலும் நடிக்க இதுவரை நான் கமிட் ஆகவில்லை. மம்முட்டியுடன் ஒரு பாட்டுக்கும் ஆடவில்லை. அப்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. அப்படி இருக்கும்போது இதுபோன்ற செய்திகள் எப்படி வெளியாகிறது என்றே தெரியவில்லை. என்றார்.
அரசியலமைப்பின் சரத்துக்கள் தொடர்பாகவோ சட்ட நுணுக்கங்கள் தாற்பரியங்கள் தெரியாத வட மாகாண சபை ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வழங்குவதில்லையென்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போக்குவரத்து அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி. இதனை தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் செயற்படுவதற்கே வட மாகாண சபை அனைத்து முயற்சிகளையும் முன்னகர்வுகளையும் மேற்கொள்கின்றது. சட்டங்களை மதிக்கின்றது.
ஆனால் அரசாங்கமும் வட மாகாண ஆளுநரும் அவ்வாறு செயற்பட விடாது அரசியலமைப்பை மீறி நடக்கின்றனர். ஆனால் அரசியலமைப்பை மீறி வட மாகாண சபை செயற்படுவதாக ஆளுநர் குற்றம் சாட்டுகிறார்.
அரசியலமைப்பு தொடர்பாகவோ அதிலுள்ள சரத்துக்கள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் தாற்பரியங்கள் எதுவும் தெரியாத தெளிவில்லாத சட்டவிரோத கொலைகளில் மற்றும் தேர்ச்சி பெற்றவரான வட மாகாண ஆளுநர் தான் அரசியலமைப்பை மீறிச் செயற்படுகின்றார்.
ஆளுநர் மட்டுமல்ல மத்திய அரசாங்கமும் அரசியலமைப்பை மீறியே செயற்படுகின்றது. ஒரு மாகாணத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்படும் போது அம் மாகாணத்தின் முதலமைச்சரின் இணக்கம் பெறப்பட வேண்டுமென அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மீறி வட மாகாண பொலிஸ் அத்தியட்சகராக பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவரை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அரசாங்கம் இவ்விடயத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளது.
அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வழங்குவதில்லையென்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போக்குவரத்து அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி. இதனை தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் செயற்படுவதற்கே வட மாகாண சபை அனைத்து முயற்சிகளையும் முன்னகர்வுகளையும் மேற்கொள்கின்றது. சட்டங்களை மதிக்கின்றது.
ஆனால் அரசாங்கமும் வட மாகாண ஆளுநரும் அவ்வாறு செயற்பட விடாது அரசியலமைப்பை மீறி நடக்கின்றனர். ஆனால் அரசியலமைப்பை மீறி வட மாகாண சபை செயற்படுவதாக ஆளுநர் குற்றம் சாட்டுகிறார்.
அரசியலமைப்பு தொடர்பாகவோ அதிலுள்ள சரத்துக்கள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் தாற்பரியங்கள் எதுவும் தெரியாத தெளிவில்லாத சட்டவிரோத கொலைகளில் மற்றும் தேர்ச்சி பெற்றவரான வட மாகாண ஆளுநர் தான் அரசியலமைப்பை மீறிச் செயற்படுகின்றார்.
ஆளுநர் மட்டுமல்ல மத்திய அரசாங்கமும் அரசியலமைப்பை மீறியே செயற்படுகின்றது. ஒரு மாகாணத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்படும் போது அம் மாகாணத்தின் முதலமைச்சரின் இணக்கம் பெறப்பட வேண்டுமென அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மீறி வட மாகாண பொலிஸ் அத்தியட்சகராக பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவரை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அரசாங்கம் இவ்விடயத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும்.
அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன். இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும்.
ஆனால் அதனைச் செய்யாது காயங்களை பாதுகாத்து வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத் தரப்பிற்கு தாவிய அம்பாறை மாவட்ட எம்.பியான பியசேன இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய பியசேன எம்.பி மேலும் கூறுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்து அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும்.
இராமாயணத்திற்கு ஒரு கூனி, மகாபாரதத்திற்கு ஒரு சகுணி அதே போன்று தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகில் கொடிகட்டிப் பிறந்த இனம் தமிழினம். ஆனால் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தமிழினம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றன.
அதில் உள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் ஸ்ரீதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம்.
இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும். அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன். இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும். ஆனால் அதனைச் செய்யாது காயங்களை பாதுகாத்து வருகின்றனர்.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு சென்றும் நடிக்கிறது இங்கேயும் நடிக்கின்றது. கச்சதீவு என்பது பாம்பு கழற்றிய செட்டை போன்றது. பாம்பு தான் கழற்றிய செட்டையை ஒரு போதும் திரும்ப போட்டுக் கொள்ளாது. அதே போன்று கச்சத்தீவை ஒரு போதும் இந்தியா திரும்பபெற முடியாது.
எமது நாட்டை இராவணன் என்ற மன்னன் ஆண்டான். தற்போது மகிந்த என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி செய்கின்றார். இதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுக்க முடியவில்லை. இதனால் தான் சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.
அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன். இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும்.
ஆனால் அதனைச் செய்யாது காயங்களை பாதுகாத்து வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத் தரப்பிற்கு தாவிய அம்பாறை மாவட்ட எம்.பியான பியசேன இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய பியசேன எம்.பி மேலும் கூறுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்து அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும்.
இராமாயணத்திற்கு ஒரு கூனி, மகாபாரதத்திற்கு ஒரு சகுணி அதே போன்று தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகில் கொடிகட்டிப் பிறந்த இனம் தமிழினம். ஆனால் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தமிழினம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றன.
அதில் உள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் ஸ்ரீதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம்.
இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும். அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன். இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும். ஆனால் அதனைச் செய்யாது காயங்களை பாதுகாத்து வருகின்றனர்.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு சென்றும் நடிக்கிறது இங்கேயும் நடிக்கின்றது. கச்சதீவு என்பது பாம்பு கழற்றிய செட்டை போன்றது. பாம்பு தான் கழற்றிய செட்டையை ஒரு போதும் திரும்ப போட்டுக் கொள்ளாது. அதே போன்று கச்சத்தீவை ஒரு போதும் இந்தியா திரும்பபெற முடியாது.
எமது நாட்டை இராவணன் என்ற மன்னன் ஆண்டான். தற்போது மகிந்த என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி செய்கின்றார். இதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுக்க முடியவில்லை. இதனால் தான் சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.
About Me
Powered by Blogger.