கடந்த ஒன்பது மாதங்களாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருக்கும் பாப்பரசர் பிரான் ஸிஸ்இ மனச்சாட்சியின் புதிய குரலாக உருவெடுத்துள்ளார் என்றும் அந்தப் பத்திரிகை கூறுகிறது.
மிகக் குறுகிய காலத்தில், சர்வதேச அர ங்கில் புதிதாக நுழைந்த ஒருவர் இந்த அளவுக்கு விரைவாக கவனத்தை ஈர்ப்பது மிகவும் அபூர்வமானது என்று அப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் நான்சி கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
வறுமை, செல்வம், உலகமயமாதல் மற்றும் இதர முக்கிய மான விஷய ங்கள் குறித்த விவாதங்களில் பாப்பரசர் பிரான்ஸிஸ் தன்னை மையப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கர்தினால்கள் குழுவொன்றால் பாப்பரசராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் அவர் போனஸ் ஏரிஸ் நகரின் பேராயராக இருந்தார்.




0 comments to "இந்த ஆண்டின் சிறந்த மனிதர் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் 'டைம்' பத்திரிகை தெரிவு"