Home » » அம்பலமாகிய கடல்படைத்தளபதியின் ஊழல் மோசடி

சீனாவில் இருந்து பொஸ்பேற் உரத்தை அரைக்கும் இயந்திரம் கொள்வனவு செய்ததில், முறைகேடு செய்த, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி, லங்கா பொஸ்பேற் நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொஸ்பேற் உரத்தை அரைக்கும் இயந்திரம் 560 மில்லியன் ரூபா செலவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்த சர்ச்சைக்குரிய கொள்வனவு தொடர்பான விபரங்களை ஐதேக அண்மையில் பகிரங்கப்படுத்தியிருந்த நிலையில், அட்மிரல் தயா சந்தகிரி லங்கா பொஸ்பேற் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

லங்கா பொஸ்பேற் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நந்தன ராஜபக்ச, சர்ச்சைக்குரிய இந்த இயந்திரக் கொள்வனவே இவரது பதவிநீக்கத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

0 comments to "அம்பலமாகிய கடல்படைத்தளபதியின் ஊழல் மோசடி "

Leave a comment

Powered by Blogger.