Home » » நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் தனிப்பட்ட முறையில் நல்லடக்கம்

தென் ஆபி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டே­லாவின் பூத­வு­டலை தனிப்­பட்ட முறையில் நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு அவ­ரது குடும்­பத்­தினர் விரும்­பு­வதால் அவ­ரது நல்­ல­டக்­கத்தை பார்­வை­யிடும் வாய்ப்பு பொதுமக்­க­ளுக்கு கிடைப்­பது சாத்­தி­ய­மில்லை என அந்­நாட்டு அர­சாங்க பேச்­சாளர் ஒருவர் வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்தார்.


நெல்சன் மண்­டே­லாவின் சொந்தக் கிரா­ம­மான குனுவில் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற­வுள்ள அவ­ரது மரணச் சடங்கில் வெளி­நாட்டு முக்­கி­யஸ்­தர்கள் அர­சியல் தலை­வர்கள் உட்­பட குறைந்­தது 5000 பேர் கலந்து கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.


இந்­நி­லையில் குனு கிரா­மத்தில் மண்­டே­லாவின் பூத­வு­ட­லுக்­கான ஆரம்­ப­கட்ட பொது மக்கள் அஞ்­சலி நிறைவு பெற்­றதும் தொடர்ந்து நடை­பெ­றும் சடங்­குகள் அவ­ரது குடும்­பத்­தி­னரின் விருப்­பத்தின் பிர­காரம் தனிப்­பட்ட முறையில் இடம்­பெறும் என அர­சாங்க பேச்­சா­ள­ரான பும்லா வில்­லியம்ஸ் தெரி­வித்­துள்ளார்.

அவ­ரது குடும்­பத்­தினர் நெல்சன் மண்­டே­லாவை நல்­ல­டக்கம் செய்­வது குடும்ப விவ­காரம் என குறி்ப்­பிட்­டுள்­ளனர் எனத் தெரி­வித்த பும்லா அவர்கள் அவ­ரது மரணச் சடங்கை தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பு­வ­தற்கு விரும்­ப­வில்லை. குறிப்­பாக அவ­ரது பூத­வுடல் புதை­கு­ழியில் வைக்­கப்­ப­டு­வதை மக்கள் காண்­பதை அவர்கள் விரும்­ப­வில்லை என்று கூறினார்.

பொது மக்கள் அஞ்­ச­லிக்­காக தலை­நகர் பிரெ­டோ­ரி­யாவில் கடந்த 3 தினங்­க­ளாக வைக்­கப்­பட்­டி­ருந்த நெல்சன் மண்­டே­லாவின் பூத­வுடல் இன்று சனிக்­கி­ழமை காலை இரா­ணுவ விமா­னத்தில் அவ­ரது சொந்த இடத்­திற்கு எடுத்துச் செல்­லப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 8.00 மணிக்கு இடம் பெறும் 2 மணி நேர பொது மர­ணச்­ச­டங்­கிற்­காக விசேட மண்­ட­பமும் வளை­வான கூரையைக் கொண்ட பாரிய கூடா­ரமும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

நெல்சன் மண்­டே­லாவின் மரணச் சடங்கு தொடர்­பான செய்­தி­களை சேக­ரிக்க வியா­ழக்­கி­ழமை மாலை 3000 ஊட­க­வி­ய­லா­ளர்கள் வரை கேப் மாகா­ணத்­தி­லுள்ள குனு கிரா­மத்தை முற்­று­கை­யிட்­டி­ருந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
கேப் மாகாண விமான நிலை­யத்­துக்கு இரா­ணுவ விமா­னத்தில் கொண்டு வரப்­படும் நெல்சன் மண்­டே­லாவின் பூத­வுடல் இரா­ணுவ மரியாதையொன்றையடுத்து பீரங்கி வாகனமொன்றில் வைக்கப்பட்டு பின்னர் பிரேதம் வாகனத்தின் மூலம் குனு கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அவரது தெம்பு சமூகத்தினர் பாரம் பரிய மரணச் சடங்குகளை நடத்தவுள்ளனர்.

0 comments to "நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் தனிப்பட்ட முறையில் நல்லடக்கம்"

Leave a comment

Powered by Blogger.