தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது அவ்வாறு செய்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அரசியல் அமைப்பின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என உள்விவகார அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி அரசியல் அமைப்பை பேணுவதாகத் தெரிவித்து பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வட மாகாண அரசியல்வாதிகள் அதற்கு முரணாக செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்துமாறும் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன தமக்கு ஆலோசனை வழங்கியதாக அபயகோன் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய கொடி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த தேசிய கொடியை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேசிய கொடி ஏற்றல் தொடர்பிலான வழிகாட்டல்கள் மாகாண ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




0 comments to "தேசியக்கொடிக்கு மரியாதை செய்யாவிட்டால் நிட்சயம் தண்டனை "