புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜனதாப்பட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டிணம் ஆகிய இடங்களில் இருந்து 8 படகுகளில் வந்த 30 மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதன்படி கைது செய்யப்பட்டவர்கள் 30 மீனவர்களும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதன்படி யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் குறித்தவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த மீனவர்களின் 8 படகுகளையும் பாதுகாப்பில் வைக்குமாறும் பிடிக்கப்பட்ட மீன்களை அழிக்குமாறும் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 comments to "இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் மல்லாகம் நீதவான் "