Home » » பூட்டிய விமானத்தில் சிக்கிய நபர்

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலிருந்து ஹூஸ்டன் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் நபர் ஒருவர் தூங்கிச் சென்று பிறகு விழித்துப் பார்க்கும்போது விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.


ஜன்னல் ஓர ஆசனத்தில்அமர்ந்திருந்த வாக்னர் என்ற அந்த நபர் நன்றாகத் தூங்கிவிட்டார். விமானம் ஹூஸ்டன் வந்து விமானம் நிறுத்தப்படவேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டன. விமானத்தின் உள்ளே நபர் ஒருவர் இருப்பது தெரியாமல் இது நடந்துள்ளது.
வாக்னர் விழித்துப்பார்க்கும்போது இருட்டில் தனியாக இருப்பதைக் கண்டு மிரண்டு போயுள்ளார். நல்லவேளையாக அவரது தொலைப்பேசி சிக்னல்கள் செயலில் இருந்தது.


0 comments to "பூட்டிய விமானத்தில் சிக்கிய நபர்"

Leave a comment

Powered by Blogger.