ஜெர்மனியினில் வசித்து வரும் புலம்பெயர் சொந்தங்களான சிவகுமார் - பேரின்பவதனி தம்பதியினர் தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர்.
கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே தமது வாழ்வை தொடரும் இம்முன்னாள் போராளிக்கு கைகொடுக்கும் வகையினில் அவர்கள் தமது அன்பளிப்பினை ஹெல்பிங் ஹேட்ஸ் அமைப்பினூடாக வழங்கியிருந்தனர்.
அவ்வுதவியினை பொறுப்பேற்று கைகளினில் சேர்ப்பித்திருந்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவரான ச.சஜீவன்.தமது பிறந்த நாளிற்கென நட்சத்திர விடுதிகளினில் தண்ணீராக அள்ளிக்கொட்டும் தாயக மற்றும் புலம்பெயர் சொந்தங்களிற்கு இதுவோர் நல்ல உதாரணம்.
நன்றி பதிவு




0 comments to "எமது உறவுகளுக்கு நாமும் உதவலாமே "