Home » » வடமாகணசபையின் அடுத்த அமர்வு தைமாதம் 9 ம் திகதி

வடமாகாண சபையின் அடுத்த அமர்வு 2014 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண வரவு செலவுத்திட்ட விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று இன்று ஏகமனதாக சபை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் 3.30 மணியுடன் நிறைவுக்கு வந்த சபையில் அடுத்த அமர்வுக்கான நாள் புதிய ஆண்டில் ஜனவரி 9 ஆம் நாள் என அவைத்தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணசபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், சில புதிய திணைக்களங்களை உருவாக்க முயன்றுள்ளதாகவும், இது அரசியலமைப்புக்கு விரோதமானது என வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

0 comments to "வடமாகணசபையின் அடுத்த அமர்வு தைமாதம் 9 ம் திகதி "

Leave a comment

Powered by Blogger.